பண்ருட்டி, ஜன. 6: பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் இயந்திர கண்காட்சி நடந்தது. இதில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவெ கணேசன், எம்எல்ஏக்கள் சபா ராஜேந்திரன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சென்னை தொழிலதிபர் குமரவேல், கடலூர் மாவட்ட தொழில் மைய மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் இரண்டாவது நாள் விழாவில் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முந்திரி விவசாயியும், விருத்தாசலம் எம்எல்ஏவுமான ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தொடர்பான புத்தகத்தை வெளியிட, மாவட்ட தொழில் மைய மேலாளர் வெங்கடேசன் பெற்றுக்கொண்டார். இதில் தலைவர் மலர்வாசகம், செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி உள்ளிட்ட பல்வேறு முந்திரி தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.